Poem: இருமனம் இணைந்த காவியம்

Aug 19, 2026,02:51 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


உலகெல்லாம் உயிருண்டு உயிர்ப்பில் களிப்புண்டு!

உறவுகள் ஆயிரமுண்டு உணர்வுகளும் அதிலுண்டு!


உன்னதமான காதலுமுண்டு உவகையுறும் மனமிரண்டு!

உதயமாகும் வழியுண்டு உத்தமமான வாழ்க்கையுண்டு!


உடலில் பாதியுண்டு உதிரத்தில் மீதியுண்டு!

உச்சத்தில் அன்புண்டு உருவாக்கும் பிறப்புண்டு!


உழைப்பில் உறுதியுண்டு

உளவியலில் 

சமத்துவமுண்டு!




உருவாகும் சண்டையுமுண்டு

உடனடித் தீர்வுமுண்டு!


உண்மையும் உள்ளத்திலுண்டு

உளறலும் சங்கமிப்பதுண்டு!


உதட்டில் சிரிப்புண்டு 

உரிமையில் பொறுப்புண்டு!


உமிழ்நீரும் ருசிப்பதுண்டு

உவர்நீரும் இனிப்பதுண்டு!


உயிரோட்டமாக எவருண்டு

உயிரோவியமாகும் இணையர்களுண்டு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Poem: இருமனம் இணைந்த காவியம்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்