- கவிஞர் பி.எஸ். முருகேசன்
அரக்க பறக்க
எந்திரிச்சு
ஆளாளுக்கு வேலை செஞ்சு
பிழைப்பு தேடி ஓடுவது
நகரம்
ஓடி ஓடி ஒழச்சா தான்
வாழ்க்கை அங்கே சிகரம்
இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சிரமம்
தொட்டதெல்லாம்
காசுதான்
முட்டை கூட
மாஸ் தான்

சட்டைப் பையில்
பணம் இருந்தா
கட்டைப் பையும்
சொகுசு தான்
கடை வீதியிலே
நடப்பதே ரொம்ப மிடுக்கு தான்
மெஷினைப் போல
வேலை செஞ்சும்
மிச்சம் மீதி
ஒன்னும் இல்லே
அந்த கதையை
நானும் என்ன சொல்ல
வாடகைக்கு பணம்
இல்லே
வாழ்க்கை ஒன்னும்
சுகமில்லே
நாய் போல
ஒழச்சாலும்
நாலு காசு
மிச்சம் இல்லே
தேதி ஒன்னு
பொறந்துட்டா
தேவை கொஞ்சம்
அதிகம்
தேடி தேடி
அலையும்
மனசு நொந்து
தொலையும்
ஆடம்பரம் இல்லேன்னாலும்
அவசியத்தின் தேவை
ஆட்டி வைக்கும்
மாயை
அது கொடுக்கும்
சோர்வை
அத்தனையும் எதிர்
கொண்டு
வாழ்பவன் தான்
மேதை
அவனைத் தானே
அரவணைப்பாள்
அழகு வண்ண
ராதை
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
தேடி தேடி அலையும் மனசு நொந்து தொலையும்!
Poem: இருமனம் இணைந்த காவியம்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
{{comments.comment}}