அவர் பேசிக் கொண்டே இருக்கட்டும்.. ஆளுநர் ஆர். என். ரவியை சீண்டிய மு.க.ஸ்டாலின்

Jun 07, 2023,09:23 AM IST
சென்னை: திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், வெற்றியையும் ஒருவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால்தான் தினசரி ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் அப்படியே தொடர்ந்து  பேசிக் கொண்டிருக்கட்டும் என்று ஆளுநர் ஆர். என். ரவியை மறைமுகமாக சாடியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையிலான பூசல் தொடர்ந்து நீரு பூத்த நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ரவி சீண்டுவதும், ஸ்டாலின் பதில் அளிப்பதுமாக இது தொடர்ந்து கொண்டுள்ளது.



இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை சாடிய ஆளுநர் ரவி, இதனால் மட்டும் முதலீடுகள் வந்து விடாது. தொழிலதிபர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த பின்னணியில் சென்னையில் நேற்று 500 நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் ஆளுநருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.

முதல்வர் பேசியபோது குறிப்பிட்டவற்றிலிருந்து சில துளிகள்: திராவிட மாடல் அரசுக்கு கல்வியும், சுகாதாரமும் இரு கண்களைப் போல. அதற்கேற்பவே திட்டங்களை நாங்கள் இயற்றி செயல்படுத்தி வருகிறோம்.

கல்வித்துறையிலும், வளர்ச்சியிலும்  தமிழ்நாடு தலை சிறந்து விளங்குகிறது. மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்குகிறது. இருப்பினும் ஒருவருக்கு மட்டும் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. புரிந்து கொள்ளவும் அவர் விரும்புவதில்லை.

திராவிட மாடல் அரசையும், அதன் வெற்றியையும் அவர் விரும்பவில்லை, ஏற்கவும் மனம் வரவில்லை. எனவேதான் மக்களைக் குழப்புவதற்காக அரசு குறித்து ஏதாவது விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் மக்கள் தெளிவானவர்கள். அவர்களுக்கு எல்லாம் புரியும். அவர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.  எனவே அவர் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும்.. பேசிக் கொண்டே இருக்கட்டும்.  அவர் அப்படிப் பேசிக் கொண்டிருந்தால்தான் நாமும் எழுச்சியுடன் இருக்க முடியும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நல வாழ்வு மையங்கள், ஏற்கனவே உள்ள நகர்ப்புற தொடக்க நல்வாழ்வு மையங்களுடன் இணைந்து செயல்படும். மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள ஏழை மக்களுக்காக இவை செயல்படும். சென்னை தவிர மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய பிராந்தியங்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மையமும் ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஒரு டாக்டர், நர்ஸ், ஹெல்த் இன்ஸ்பெக்டர், துப்புறவுப் பணியாளர் ஆகியோர் இருப்பார்கள். இவர்களது பணி நேரமானது காலை 8 மணி முதல் பிற்கபகல் 12 மணி வரையிலும், பின்னர்  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலுமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்