குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் அவசியமில்லை.. இது சீனாவில்!

Feb 02, 2023,11:27 AM IST
பீஜிங் :  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என சீனாவின் சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.



மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என்ற சட்டம் பல காலமாக சீனாவில் அமலில் இருந்து வருகிறது. இதனால் கருக்கலைப்புக்கள் அதிகம் நடைபெற்றன. இந்த காரணத்தால் இந்த கொள்கை 2016 ல் ரத்து செய்யப்பட்டது. 

சீனாவில் பல காலமாக இருக்கும் கட்டுப்பாடு காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து, இறப்பு விகிதம் அதிகரிக்க துவங்கியது. இதனால் திருமணமாகாதவர்களும் கூட மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. 

இருந்த போதிலும் கடந்த ஆண்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவாக மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இதனால் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாண அரசு, குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் ஆகாதவர்களும் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்