கோயம்புத்தூர் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை.. முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Jul 07, 2023,10:01 AM IST

கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜியாக செயல்பட்டு வந்த விஜயக்குமார் ஐபிஎஸ் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம்தான் நியமிக்கப்பட்டார் விஜயக்குமார். மக்களின் பாராட்டைப் பெறும் வகையில் பணியாற்றி வந்த விஜயக்குமார் கோவையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. விஜயக்குமாரின் திடீர் மரணம் காவல்துறையில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

டிஐஜி விஜயக்குமார் மரணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 

விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.  டிஐஜி விஜயக்குமாரின் மரணத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்