ஒடிஷா ரயில் விபத்து..  பட்நாயக்குடன் ஸ்டாலின் பேச்சு.. கருணாநிதி பிறந்த நாள் கூட்டம் ரத்து

Jun 03, 2023,09:56 AM IST
சென்னை: ஒடிஷா ரயில் விபத்தைத் தொடர்ந்து அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் மூலம் பேசியுள்ளார். மேலும் இன்று திட்டமிடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன்,  பெங்களூரு - ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதிக் கொண்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.



இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர், தீயணைப்புப் படையினர் என பலரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் சென்னை, பெங்களூர் ரயில்கள் சிக்கியிருப்பதால் தமிழ்நாடு, கர்நாடகத்தில் சோகம் நிலவுகிறது.  விபத்து நடந்ததும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கைத் தொடர்பு கொண்டு பேசினார். விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அறிவித்தார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒடிஷா விரைகிறார்.

இந்த நிலையில் இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாலையில் பொதுக்கூட்டத்திற்கும், பகலில் செம்மொழிப் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மாறாக கருணாநிதி நினைவிடத்திலும், ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்