ஈரோடு தேர்தலை ரத்து செய்யுங்க...தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்த தேமுதிக

Feb 21, 2023,03:01 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தேர்தலுக்கு தடை கேட்டு அடுத்தடுத்த கட்சிகள் மனு அளித்து வருகின்றன.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், அது தொடர்பாக புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கும் வரை தேர்தலை நடத்த அனுமதி வழங்கக் கூடாது. தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்ட கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், அதை தள்ளுபடி செய்துள்ளது.




இந்நிலையில் ஈரோடு தேர்தலை ரத்து செய்யக் கோரி, தேமுதிக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தேர்தலில் பண பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்