ரொம்ப  நேரம் உட்காராதீங்க.. அப்பப்ப 3 நிமிஷம் நடங்க.. சுகர் வராது!

Apr 27, 2023,03:44 PM IST

என்னதான் ரெகுலராக உடற்பயிற்சி எல்லாம் செய்தாலும் கூட, நீண்ட நேரம் எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் அமர்ந்திருப்பது உடல் நலனுக்கு கெடுதலாம். இதுபோன்று ஆணி அடித்தாற் போல நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு டைப் 1 சர்க்கரை வியாதி வரக் கூடுமாம்.


எனவே உட்கார்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளோர், நீண்டநேரம் அமருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும்  அரை மணி நேரத்திற்கு ஒருமுறை 3 நிமிடம் நடந்து கொடுக்க வேண்டுமாம். அதுபோல செய்தால் டைப் 1 சர்க்கரை வியாதியைத் தவிர்க்க முடியுமாம்.


டைப் 1 சர்க்கரை வியாதி வந்தால் அவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அறவே இருக்காது. இப்படிப்பட்ட நிலையைத் தவிர்க்க நீண்ட நேரம் அமராமல் அவ்வப்போது எழுந்து நடந்து கொடுப்பது நல்லது.  இதுபோல செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்குமாம்.


இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த சர்க்கரை வியாதி நிபுணர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன் கூறுகையில், டைப் 1  சர்க்கரை வியாதி வந்து விட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்வதற்கு முயல வேண்டும்.  உடல் ரீதியாக ஆக்டிவாக இருப்பது நல்லது.  உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. மாறாக, நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல், அவ்வப்போது , குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து 3 நிமிடம் அளவுக்கு நடந்தால் நல்லது.


போன் வந்தால் அப்படியே அமர்ந்து கொண்டு பேசாமல் நடந்து கொண்டே பேசுவது, அவ்வப்போது டைமர் வைத்து பிரேக் எடுத்துக் கொண்டு நடப்பது என்று பழக்கப்படுத்த வேண்டும்.  நீண்ட நேரம் அமருவதைத் தவிர்க்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டே இருப்பது நல்லது. அடிக்கடி நடந்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு மேம்படும். சிக்கல்கள் வருவதைத் தடுக்க அது உதவும் என்றார் அவர்.


இனிமேல் அலுவலகத்தில் யாராவது அடிக்கடி நடந்தால் அவர்களைப் பார்த்து குழப்பமடையாதீங்க.. அவர் ஹெல்த்தில் அக்கறை உள்ளவராகக் கூட இருக்கலாம்.. நீங்களும் அவ்வப்போது நடந்து பழகுங்க!

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்