"இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?".. டாக்டர் ராமதாஸ் கேள்வி

Jun 09, 2023,10:30 AM IST

சென்னை: குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்சி கூறிய கருத்துக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது போல அந்த நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துத்தான் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு. 

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது  பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள்  14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு...

திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு  'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார்.

அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

இப்போது சொல்லுங்கள்....

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதித்தது. இந்த உத்தரவு கவலையை ஏற்படுத்துவதாகவும் அது தெரிவித்திருந்தது.

இப்போது குஜராத் நீதிபதி ஒருவர் மனஸ்மிருதியை உதாரணம் காட்டி குழந்தைத் திருமணம் எல்லாம் சகஜமானதே என்பது போல கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்