சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால், அந்த தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அவரின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மார்ச் 10 ம் தேதி எம்எல்ஏ.,வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மார்ச் 15 ம் தேதி மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன், லேசான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}