சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால், அந்த தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அவரின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மார்ச் 10 ம் தேதி எம்எல்ஏ.,வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மார்ச் 15 ம் தேதி மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன், லேசான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}