சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால், அந்த தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அவரின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மார்ச் 10 ம் தேதி எம்எல்ஏ.,வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மார்ச் 15 ம் தேதி மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன், லேசான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}