களைகட்டிய ரம்ஜான் 2023 : இந்தியாவில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாட்டம்

Apr 22, 2023,09:29 AM IST
டில்லி : இந்தியாவில் ஏப்ரல் 22 ம் தேதியான இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி, ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர். 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மார்ச் 24 ம் தேதி துவங்கியது. ரமலான் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் பகல் பொழுதில் தண்ணீர், உணவு ஆகியவற்றை தவிர்த்து கடுமையான நோன்பு கடைபிடித்து வந்தனர். ரமலான் மாதம் நிறைவடைந்து, இஸ்லாமிய நாட்காட்டியில் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதம் துவங்கும் நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.



ஏப்ரல் 20 ம் தேதி பிறை தெரியாத நிலையில் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலும், இந்தியாவின் கேரள மாநிலம், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 21 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகள், ஆசிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

மும்பை சந்தையில் ரம்ஜானை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் விற்பனை ஜோராக நடந்தது. இன்று அதிகாலை முதல் மசூதிகளிலும், மைதானங்களிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த சிறப்பு தொகையில் கலந்து கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

புத்தாண்டை உடுத்தி, சிறப்பு தொழுகை நடத்திய பிறகு இனிப்புக்களையும், ஈகை பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வருகின்றனர். மற்ற இன மக்களும் தங்களின் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்