களைகட்டிய ரம்ஜான் 2023 : இந்தியாவில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாட்டம்

Apr 22, 2023,09:29 AM IST
டில்லி : இந்தியாவில் ஏப்ரல் 22 ம் தேதியான இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி, ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர். 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மார்ச் 24 ம் தேதி துவங்கியது. ரமலான் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் பகல் பொழுதில் தண்ணீர், உணவு ஆகியவற்றை தவிர்த்து கடுமையான நோன்பு கடைபிடித்து வந்தனர். ரமலான் மாதம் நிறைவடைந்து, இஸ்லாமிய நாட்காட்டியில் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதம் துவங்கும் நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.



ஏப்ரல் 20 ம் தேதி பிறை தெரியாத நிலையில் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலும், இந்தியாவின் கேரள மாநிலம், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 21 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகள், ஆசிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

மும்பை சந்தையில் ரம்ஜானை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் விற்பனை ஜோராக நடந்தது. இன்று அதிகாலை முதல் மசூதிகளிலும், மைதானங்களிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த சிறப்பு தொகையில் கலந்து கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

புத்தாண்டை உடுத்தி, சிறப்பு தொழுகை நடத்திய பிறகு இனிப்புக்களையும், ஈகை பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வருகின்றனர். மற்ற இன மக்களும் தங்களின் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்