ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுத்தாக்கல்

Feb 02, 2023,03:09 PM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதன் இன்று, தனது கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற வேட்புமனு தாக்கல் செய்தார்.



ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 07 ம் தேதி கடைசி நாளாகும். 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வோட்டியிடும் மேனகா நவநீதன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்ை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதே சமயம், இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் டி.செந்தில் முருகன் போட்டியிடுவார் என வேட்பாளரை அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்