ஈரோடு கிழக்கு: ஓங்கியது "கை".. 66,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Mar 02, 2023,09:22 AM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,000 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.



ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று (மார்ச் 02) காலை துவங்கி எண்ணப்பட்டு வந்தன.

முதல் சுற்றிலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். அவரை ஒரு சுற்றில் கூட அதிமுக வேட்பாளர் தென்னரசு முந்த முடியவில்லை. இறுதியாக 15வது சுற்றின் முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,000 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தார். 

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: 

ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்) -  1,10,556
தென்னரசு (அதிமுக) - 43,981
மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) - 10,804
ஆனந்த் (தேமுதிக) - 1301

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்