Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்

Feb 28, 2023,09:03 AM IST
டெல்லி: திரிபுரா, நாகாலாந்து சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மேகலாயாவில் பாஜகவுக்கு 3வது இடமே கிடைக்குமாம்.



மேகலாயலா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் நீங்கள் யாருக்கு  வாக்களித்தீர்கள் என்று கேட்டு அதுதொடர்பான கணிப்பை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 



அதன்படி திரிபுராவில் பாக மீண்டும் ஆட்சியமைக்கும். அதேபோல நாகாலாந்து மாநிலத்திலும் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாம். மேகலாயாவில் பாஜகவுக்கு 3வது இடமே கிடைக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மொத்தத்தில் வட கிழக்கில் பாஜக தனது கால்களை வலுவாக ஊன்றவுள்ளதை இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.  பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் திரிபுரா மாநிலத்தில் பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான சீட்டுகளை விட ஒரு சீட் பாஜகவுக்கு அதிகம் கிடைக்கும் என்று இந்தக் கணிப்புகள் சொல்கின்றன.  திரிபுரா சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இந்த மாநிலத்தை இடதுசாரிகள் கிட்டத்தட்ட 30 வருடம் ஆட்சி புரிந்தனர் என்பது நினைவிருக்கலாம். 

கடந்த 2018 தேர்தலில் இங்கு நடந்த தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியடைந்து  பாஜக ஆட்சியமைத்தது.  இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் 15 இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது அக்கட்சியினரை அதிர வைத்துள்ளது.

திர்பாலான்ட் தனி மாநிலக் கோரிக்கையுடன் புதிய கட்சியைத்  தொடங்கி தேர்தலில் குதித்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர் தெப்பர்மாவுக்கு 12 சீட் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 36 இடங்கள் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம். இந்த முறை அது குறையும் வாய்ப்புள்ளது.

மேகலாயாவைப் பொறுத்தவரை  அங்கு கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி தனிப் பெரும் கட்சியாக 20 சீட்டுகளுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாம். கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜகவுக்கு  இந்த முறை இங்கு 6 சீட் வரை கிடைக்குமாம்.  காங்கிரஸ் கட்சிக்கு 6 சீட் கிடைக்கலாமாம். முதல் முறையாக இங்கு போட்டியிட்டுள்ள திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 11 சீட் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

கடந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக இந்த முறை 60 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுள்ளது. தற்போது திரினமூல் காங்கிரஸ் அதிக சீட்களைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் சக்தியாக அது உருவெடுக்கும் என்று தெரிகிறது.

நாகாலாந்து மாநிலத்தில் பாஜக - என்டிபிபி கூட்டணிக்கு 42 இடங்கள் கிடைக்கலாம். பெரும்பான்மைக்குத் தேவையானது 31 சீட் மட்டுமே.  என்பிஎப்  கூட்டணிக்கு 6 இடங்களும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்