10 வருடமாக.. பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த 51 பேர் .. படம் எடுத்த கணவன்!

Jun 22, 2023,03:28 PM IST

பாரீஸ்: பிரான்சில் தனது மனைவியை கடந்த 10 வருடமாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுத்து ரசித்துள்ளார் ஒரு குரூரமான புருஷன். இந்த விவகாரம் பிரான்ஸை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


மொத்தம் 51 பேர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் எத்தனை முறை பலாத்காரம் செய்தார்கள் என்பதற்கு கணக்கே கிடையாது. கிட்டத்தட்ட தினசரி இந்த அக்கிரமம் நடந்துள்ளது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து இந்த பலாத்காரக் கொடுமையை இந்த கொடூரன் அரங்கேற்றியுள்ளார். இதை முழுக்க முழுக்க அவர் வீடியோ படமும் எடுத்துள்ளார்.


என்ன கொடூரம் என்றால் இத்தனைக் கொடுமையும் அந்தப் பெண்ணுக்கு சமீபம் வரைக்கும் தெரியவே இல்லையாம். கணவர்தான் தன்னுடன் உறவு கொண்டுள்ளதாகவே இந்தப் பெண் நினைத்து வந்துள்ளார். கடந்த 10 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துத் தெரிய வந்ததும் அந்தப் பெண் அதிர்ந்து போய்விட்டாராம். இந்த ஜோடிக்கு திருமணமாகி 50 வருடங்களாகிறது என்பது வேதனையான இன்னொரு விஷயம்.


மொத்தம் 92 பேர் இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதுவரை 51 பலாத்காரக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கைதாகியுள்ளனர். இவர்கள் 26 முதல் 73 வயது வரை கொண்டவர்கள் ஆவர். 


நகராட்சி கவுன்சிலர், லாரி  டிரைவர், தீயணைக்கும் வீரர், ஐடி ஊழியர், வங்கி ஊழியர், சிறைக் காவலர், நர்ஸ், பத்திரிகையாளர் என சகலரும் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்.  இந்தப் பெண்ணின் கணவர் பெயர் டொமினிக்.  தினசரி தனது மனைவிக்கு இரவில் ரோலோஸெபம் என்ற மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து வந்துள்ளார் டொமினிக். அதைச் சாப்பிட்டு அவர் மயங்கிய பிறகு தனது வீட்டுக்கு ஆண்களை வரவழைப்பாராம் இந்த கணவன். அவர்கள் வந்து அப்பெண்ணை நாசம் செய்து விட்டுப் போவார்கள்.


இந்த பாலியல் வக்கிரத்தை வீடியோ எடுத்து அதை தொகுத்து வைத்து வந்���ுள்ளார் அப்பெண்ணின் கணவர். இந்த வீடியோக்களை தொகுத்து "ABUSES" என்ற பெயரில் ஒரு பென் டிரைவில் சேகரித்து வைத்துள்ளார். அதைப் போலீஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.  இதில் பல ஆண்கள் பலமுறை வந்து பாலியல் பலாத்��ாரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 


டொமினிக் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  அவர்கள் டொமினிக்கின் செயலையும், தங்களது தாய்க்கு நேர்ந்த கொடுமையையும் அறிந்து அதிர்ந்து போய் விட்டனர். கணவரின் செயலால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான டொமினிக்கின் மனைவி தற்போது விவாகரத்து செய்து விட்டார். டொமினிக் மீதான விசாரணை தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்