"செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்".. சில மணி நேரத்திலேயே உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர்!

Jun 30, 2023,08:15 AM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக  அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அந்த உத்தரவை சில மணி நேரங்களிலேயே நிறுத்தி வைத்து விட்டார்.


நாடு முழுவதிலுமிருந்து இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், இது சட்ட ரீதியாக செல்லாது என்ற சட்டக் கருத்துக்கள் எழுந்ததாலும், நாளை திமுக அரசு கோர்ட்டுக்குப் போய் அங்கு ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்துக்குள்ளானால் அது மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதாலும் ஆளுநர் தனது நடவடிக்கையை நிறுத்தி வைத்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தனது உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து கடிதம் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்ட செய்தி வெளியானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




ஆளுநருக்கு  அமைச்சரவையில் ஒருவரை சேர்க்கவோ அல்லது நீக்கவோ சுயமாக அதிகாரம் இல்லாதபோது எப்படி ரவி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இது கோர்ட்டுக்குப் போனால் ஆளுநர் கண்டனத்துக்குள்ளாவார் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன. இதுபோன்ற ஒரு நடவடிக்கை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மிகக் கடுமையாக இதைக் கண்டித்தன.


தேசிய அளவிலும் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன. இதனால் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயர் நேற்று நாடு முழுவதும் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் தனது நிலையிலிருந்து ஆளுநர் பல்டி அடித்துள்ளார். ராத்திரியோடு ராத்திரியாக தனது நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்து முதல்வருக்கும் இதை அறிவித்தார்.


செந்தில் பாலாஜி விவகாரத்தில் மிகவும் அவசரப்பட்டு விட்டார் ஆளுநர் ரவி என்ற எண்ணம் மக்கள் மத்தியிலும் எழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்