சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அந்த உத்தரவை சில மணி நேரங்களிலேயே நிறுத்தி வைத்து விட்டார்.
நாடு முழுவதிலுமிருந்து இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், இது சட்ட ரீதியாக செல்லாது என்ற சட்டக் கருத்துக்கள் எழுந்ததாலும், நாளை திமுக அரசு கோர்ட்டுக்குப் போய் அங்கு ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்துக்குள்ளானால் அது மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதாலும் ஆளுநர் தனது நடவடிக்கையை நிறுத்தி வைத்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து கடிதம் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்ட செய்தி வெளியானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநருக்கு அமைச்சரவையில் ஒருவரை சேர்க்கவோ அல்லது நீக்கவோ சுயமாக அதிகாரம் இல்லாதபோது எப்படி ரவி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இது கோர்ட்டுக்குப் போனால் ஆளுநர் கண்டனத்துக்குள்ளாவார் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன. இதுபோன்ற ஒரு நடவடிக்கை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மிகக் கடுமையாக இதைக் கண்டித்தன.
தேசிய அளவிலும் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன. இதனால் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயர் நேற்று நாடு முழுவதும் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் தனது நிலையிலிருந்து ஆளுநர் பல்டி அடித்துள்ளார். ராத்திரியோடு ராத்திரியாக தனது நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்து முதல்வருக்கும் இதை அறிவித்தார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் மிகவும் அவசரப்பட்டு விட்டார் ஆளுநர் ரவி என்ற எண்ணம் மக்கள் மத்தியிலும் எழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}