ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை:  நிறுத்தி வைக்க குஜராத் ஹைகோர்ட் மறுப்பு

Jul 07, 2023,04:08 PM IST
அகமதாபாத்: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கர்நாடகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி பேசுகையில், அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற துணைப் பெயர் இருப்பது ஏன் என்று நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் குறித்துப் பேசியிருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி என்பவர் சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.



ராகுல் காந்தி மோடி சமூகத்தை அவமதித்து விட்டார். எனவே அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட், ராகுல் காந்திக்கு அதிகபட்சமான 2 ஆண்டு தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் வகித்து வரும் பதவி பறி போய் விடும் என்ற அடிப்படையில், ராகுல் காந்தியின் எம்.பி உடனடியாக பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த குஜராத் ஹைகோர்ட் இன்று சூரத் கோர்ட் விதித்த தண்டனயை நிறுத்தி வைக்க மறுத்து  உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. அவரது தரப்பும் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று தெரிகிறது. அங்கு இந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்