தமிழில் இந்தியை திணிக்கவே முடியாது...ஆளுநர் ரவியின் ஓப்பன் டாக்

Apr 13, 2023,11:25 AM IST
சென்னை : தமிழ் மொழியில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மிக பழமையான மொழி என தமிழக ஆளுநர் ரவி, பனாரஸ் பல்கலைக்கழக  மாணவர்களிடம் பேசினார்.

விழாவில் அவர் பேசுகையில், தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழ் மீது திணிக்க முடியாது. தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.



இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் உள்ளது. தமிழ் மொழி இல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நிவைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழை ஆழமாக படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

பனாரஸ் இந்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். அதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆசிரியர்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்