தமிழில் இந்தியை திணிக்கவே முடியாது...ஆளுநர் ரவியின் ஓப்பன் டாக்

Apr 13, 2023,11:25 AM IST
சென்னை : தமிழ் மொழியில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மிக பழமையான மொழி என தமிழக ஆளுநர் ரவி, பனாரஸ் பல்கலைக்கழக  மாணவர்களிடம் பேசினார்.

விழாவில் அவர் பேசுகையில், தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழ் மீது திணிக்க முடியாது. தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.



இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் உள்ளது. தமிழ் மொழி இல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நிவைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழை ஆழமாக படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

பனாரஸ் இந்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். அதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்