லண்டனில் படித்து வந்த இந்திய மாணவி தேஜஸ்வினி ரெட்டி.. குத்திக் கொலை.. 3 பேர் கைது

Jun 15, 2023,12:12 PM IST
லண்டன்: லண்டனில் படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவி தேஜஸ்வினி ரெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி ரெட்டி. 27 வயதான இவர் உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். லண்டன் வெம்ப்ளி பகுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



அவருடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 24 வயது நபர்தான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்துள்ளது. அவருடன் மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த கொலை வழக்கில் இதுவரை  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தேஜஸ்வினியின் இன்னொரு ரூம் மேட் பெண்ணும் காயமடைந்துள்ளார்.

சமீபத்தில்தான் தனது மேல் படிப்பை முடித்திருந்தார் தேஜஸ்வினி. விரைவில் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஊருக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூட தனது பெற்றோரிடம் கூறியிருந்தார் தேஜஸ்வினி. அதற்குள் இந்தப் படுகொலை நடந்துள்ளது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை.

தேஜஸ்வினியின் உடலை தெலங்கானாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்