லண்டனில் படித்து வந்த இந்திய மாணவி தேஜஸ்வினி ரெட்டி.. குத்திக் கொலை.. 3 பேர் கைது

Jun 15, 2023,12:12 PM IST
லண்டன்: லண்டனில் படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவி தேஜஸ்வினி ரெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி ரெட்டி. 27 வயதான இவர் உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். லண்டன் வெம்ப்ளி பகுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



அவருடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 24 வயது நபர்தான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்துள்ளது. அவருடன் மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த கொலை வழக்கில் இதுவரை  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தேஜஸ்வினியின் இன்னொரு ரூம் மேட் பெண்ணும் காயமடைந்துள்ளார்.

சமீபத்தில்தான் தனது மேல் படிப்பை முடித்திருந்தார் தேஜஸ்வினி. விரைவில் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஊருக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூட தனது பெற்றோரிடம் கூறியிருந்தார் தேஜஸ்வினி. அதற்குள் இந்தப் படுகொலை நடந்துள்ளது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை.

தேஜஸ்வினியின் உடலை தெலங்கானாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்