லண்டனில் படித்து வந்த இந்திய மாணவி தேஜஸ்வினி ரெட்டி.. குத்திக் கொலை.. 3 பேர் கைது

Jun 15, 2023,12:12 PM IST
லண்டன்: லண்டனில் படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவி தேஜஸ்வினி ரெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி ரெட்டி. 27 வயதான இவர் உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். லண்டன் வெம்ப்ளி பகுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



அவருடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 24 வயது நபர்தான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்துள்ளது. அவருடன் மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த கொலை வழக்கில் இதுவரை  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தேஜஸ்வினியின் இன்னொரு ரூம் மேட் பெண்ணும் காயமடைந்துள்ளார்.

சமீபத்தில்தான் தனது மேல் படிப்பை முடித்திருந்தார் தேஜஸ்வினி. விரைவில் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஊருக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூட தனது பெற்றோரிடம் கூறியிருந்தார் தேஜஸ்வினி. அதற்குள் இந்தப் படுகொலை நடந்துள்ளது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை.

தேஜஸ்வினியின் உடலை தெலங்கானாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்