சர்வதேச வர்த்தகம் : மீண்டும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த இந்திய பங்குச் சந்தைகள்

May 30, 2023,02:36 PM IST

டில்லி : ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும், உலக அளவில் மிகப் பெரிய பங்குச்சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருந்து சரிந்தது. கடந்த ஐந்து மாதங்களாக தனது பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் இந்திய பங்குச் சந்தைகள் திணறி வந்தன.

ஆனால் அதானி குழும பங்குகளின் மதிப்பு மீண்டும் உயர துவங்கியதன் எதிரொலியாக மீண்டும் உலகின் மிகப் பெரிய பங்குச்சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது இந்தியா. மே 26 ம் தேதி பங்குச்சந்தைகள் நிறைவடைந்த போது தேசிய பங்குச்சந்தை 3.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்ந்திருந்தது.



அதே சமயம் பிரான்ஸ் பங்குச்சந்தைகள் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இழப்பை சந்தித்தன. சீன மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக பிரான்ஸ் பங்குச்சந்தைகளில் முக்கிய பங்குகளின் மதிப்பு குறைய துவங்கியது. இதுவே பிரான்ஸ் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதே சமயம் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு நிதிகளின் புழக்கம் அதிகமாக உள்ளதால் சீன பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீள துவங்கி உள்ளன. இது இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5.7 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பங்குச்சந்தைகளில் ஏப்ரல் மாதம் முதல் முதலீடு செய்து வருகின்றனர். 

இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி நிலையாக ஏற்றம் காண துவங்கின. தொடர்ந்து ஜிடிபி உயர்ந்ததால் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை உயர துவங்கி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்