ஜாவலின் துரோ.. உலகின் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

May 24, 2023,10:27 AM IST
டெல்லி: ஜாவலின் துரோ (ஈட்டி எறிதல்) போட்டியில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

உலக  தடகள சங்கம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஜாவலின் துரோவில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர்  முதல் நிலைக்கு உயர்வது இதுவே முதல் முறையாகும்.

1455 புள்ளிகளுடன் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளார். இவர்தான் தற்போது உலக ஜாவலின் துரோ சாம்பியன் ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் நாட்டின் ஜாக்குப் வட்லஜேக் 3வது இடத்தில் இருக்கிறார்.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்த நீரஜ் சோப்ரா அதன் பின்னர் தொடர்ந்து அதே இடத்திலேயே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜூரிச்சில் நடந்த டயமன்ட் லீக் 2022 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி வந்தார். அந்தக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ராதான்.

ஜாவலின் துரோவில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்