ஜாவலின் துரோ.. உலகின் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

May 24, 2023,10:27 AM IST
டெல்லி: ஜாவலின் துரோ (ஈட்டி எறிதல்) போட்டியில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

உலக  தடகள சங்கம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஜாவலின் துரோவில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர்  முதல் நிலைக்கு உயர்வது இதுவே முதல் முறையாகும்.

1455 புள்ளிகளுடன் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளார். இவர்தான் தற்போது உலக ஜாவலின் துரோ சாம்பியன் ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் நாட்டின் ஜாக்குப் வட்லஜேக் 3வது இடத்தில் இருக்கிறார்.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்த நீரஜ் சோப்ரா அதன் பின்னர் தொடர்ந்து அதே இடத்திலேயே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜூரிச்சில் நடந்த டயமன்ட் லீக் 2022 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி வந்தார். அந்தக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ராதான்.

ஜாவலின் துரோவில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்