ஜாவலின் துரோ.. உலகின் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

May 24, 2023,10:27 AM IST
டெல்லி: ஜாவலின் துரோ (ஈட்டி எறிதல்) போட்டியில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

உலக  தடகள சங்கம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஜாவலின் துரோவில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர்  முதல் நிலைக்கு உயர்வது இதுவே முதல் முறையாகும்.

1455 புள்ளிகளுடன் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளார். இவர்தான் தற்போது உலக ஜாவலின் துரோ சாம்பியன் ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் நாட்டின் ஜாக்குப் வட்லஜேக் 3வது இடத்தில் இருக்கிறார்.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்த நீரஜ் சோப்ரா அதன் பின்னர் தொடர்ந்து அதே இடத்திலேயே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜூரிச்சில் நடந்த டயமன்ட் லீக் 2022 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி வந்தார். அந்தக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ராதான்.

ஜாவலின் துரோவில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்