நாகோவன்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஜுன்மோனி ரபா, சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.
லேடி சிங்கம் என்றும் டபாங் போலீஸ் என்றும் பிரபலமானவர் ஜுன்மோனி ரபா. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நேற்று அவர் நாகோவன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார். அவர் பயணம் செய்த கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஜுன்மோனி ரபா கொல்லப்பட்டார்.
அந்தக் காரில் ஜுன்மோனி மட்டுமே இருந்துள்ளார். சீருடையில் இல்லாமல் காரில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். சருபுகியா என்ற இடத்தில் விபத்து நடந்தது. கார் மோதிய லாரி, உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்ததாகும். விபத்துக்குப் பின்னர் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல், சீருடையும் இல்லாமல் தனியாக தான் மட்டும் ரபா சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர் பயணித்தது அரசு கார் அல்ல, அவரது சொந்தக் காராகும். அப்பர் அஸ்ஸாம் பகுதியை நோக்கி அவர் போயுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் கூட தகவல் தெரிவிக்கவில்லையாம்.
ரபா கிரிமினல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தார். குறிப்பாக நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது ஈவு இரக்கமின்றி கடுமையாக நடந்து கொள்வார். மோரிகோலங் காவல் நிலையத்தில் அவர் பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் மீது ஊழல் புகார் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
ஆனால் மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கினார். பாஜக எம்எல்ஏ அமியா குமார் பூயானுடன் அவர் தொலைபேசியில் காரசாரமாக பேசிய ஆடியோ லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார். இது விபத்துதானா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}