சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கெளரி!

Feb 07, 2023,11:16 AM IST
சென்னை : வழக்கறிஞர்கள் எதிர்ப்பு, வழக்கு ஆகியவற்றை கடந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி இன்று (பிப்ரவரி 07) காலை பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக அவரது பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.



சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் என கூறி விக்டோரியா கெளரி கூடுதல் நீதிபதியாக பதவியேற்பதற்கு மூத்த வழக்கறிஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விக்டோரியா கெளரியின் நியமனத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விக்டோரியா கெளரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், பிப்ரவரி 10 ம் தேதி மனுவை விசாரிக்க பட்டியலிட்டது. ஆனால் விக்டோரியா கெளரி உள்ளிட்ட 11 வழக்கறிஞர்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை, ஐகோர்ட் கூடுதல் நீதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் விக்டோரியா கெளரி வழக்கை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 

ஆனால் பட்டியலிடப்பட்ட வழக்கு என்பதால் நீதிபதிகள் யாரும் வரவில்லை. இதனால் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கண்ணா மற்றும் கவாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இன்று 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், 10.35 மணிக்கு விக்டோரியா கெளரி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் என்ன நடக்கும் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பதவியேற்பு விழாவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜகவில் இருந்தவர், இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு எதிராக பேசியவர் என்பது நீதிபதி விக்டோரியா கெளரி மீது வழக்கறிஞர்கள் வைத்த புகார் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்