இவர் இதையும் விட்டு வைக்கலியா?. .கமலை பார்த்து பொறமைப்படும் ரசிகர்கள்

May 29, 2023,04:44 PM IST
சென்னை : தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகிலேயே கமல்ஹாசனுக்கு என்று மிகப் பெரிய பெயர் உண்டு. டான்ஸ், பாட்டு, எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம், நடிப்பு என பல துறைகளும் தலைசிறந்த கலைஞராக விளங்குபவர் கமல். சினிமாவை தாண்டி அரசியல், ஃபேஷன், சினிமா தயாரிப்பு என பலவற்றிலும் கலக்கி வருகிறார்.

இவர் தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜூன் மாதத்துடன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் முழுவதுமாக நிறைவு செய்ய உள்ளார் கமல். அதற்கு பிறகு புதிய பட வேலைகளை துவங்குவதற்கு முன் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் இந்த போட்டிகள் ஜூலை மாதம் முதல் துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.



இதற்கிடையில் கமல் அடுத்ததாக நடிக்க உள்ள கமலஹாசன் 234 படத்தை மணிரத்னம் இயக்க போவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அதே சமயம், கமலின் அடுத்த படத்தை இயக்க ஹச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கமலின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும் என ரசிக்ரகள் ஆர்வமாக காத்திருக்கிறார்.

ஆனால் கமல் கடந்த சில வாரங்களாக சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். கையில் கேமிராவுடன் இருக்கும் தன்னுடைய போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். லேட்டஸ்டாக வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் லுக்கில் இருக்கும் போட்டோக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் கமல்.அதோடு தான் நடத்தும் கதர் ஃபேஷன் நிறுவனத்திற்காக கலக்கல் போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். 

கமலின் இந்த புதிய போட்டோகிராஃபர் அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் பலர், இவர் இதையும் விட்டு வைக்கவில்லையா? இவர் தடம் பதிக்காத துறையே இருக்காது போலவே. எப்படி இவரால் மட்டும் இத்தனை துறைகளில் திறமைசாலியாக இருக்க முடிகிறது என கொஞ்சம் பொறாமை பொங்க, அதே சமயம் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்