சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க.. அட்வைஸ் செய்த லாலு.. ராகுலின் பதில் என்ன தெரியுமா?

Jun 24, 2023,09:54 AM IST
டெல்லி : சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவுரை வழங்கி உள்ளார். 

அதற்கு அதே இடத்திலேயே தனது பதிலையும் ராகுல் தெரிவித்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அரங்கேறியது.



நீண்ட காலத்திற்கு பிறகு பங்கேற்கும் ஒரு பொது நிகழ்ச்சியாக, நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் அரசியல் ஆலோசனை கூட்டத்தில் லாலு பிரசாத் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் தலைவர்கள் பேசினர். அப்போது லாலு பிரசாத் யாதவ் பேசியபோது பழைய மாதிரி கலகலப்பாக பேசினார்.

லாலு பிரசாத்யாதவ் பேசுகையில், ராகுல் காந்தி சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். முன்னாடியே நான் சொன்னேன். அவர் கேட்கலை. இப்போதும் லேட் ஆகலை.. கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த திருமண நிகழ்விலும் நாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். இதை கேட்டு ராகுல் உள்ள அனைவரும் சிரித்து விட்டனர்.

அதே இடத்திலேயே பதிலளித்த ராகுல், இப்போது தானே நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அது நடக்கும் என்றார். அப்போதும் விடாத லாலு, உங்கள் அம்மா சொல்கிறார் நீங்கள் அவர் பேச்சை கேட்பதே இல்லை என்று. இப்போதே முடிவு செய்து விடுங்கள். நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார் லாலு.

ராகுல் காந்தி கல்யாணம் என்பது நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்தான் கழுவிய நீரில் நழுவிய மீனாக எஸ்கேப் ஆகி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் ஜோதா யாத்திரையின் போது திருமணம் பற்றி ராகுல் காந்தியிடம் கேட்ட போது, சரியான பெண் கிடைத்தால் செய்து கொள்வதாக தெரிவித்தார். யாராவது அப்படி இருக்கிறார்களா என கேட்டதற்கு அப்படிப்பட்ட அன்பான புத்திசாலி யாரும் இ��்லை என்றார். இது இளம் பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மெசேஜாக எடுத்துக் கொள்ளலாமா என்று பத்திரிக்கையாளரும் ஜாலியாக கலாய்த்தார்.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கு வரப் போகும் வாழ்க்கை துணை தனது அம்மா சோனியா காந்தியின் குணங்களையும், பாட்டி இந்திரா காந்தியின் குணங்களையும் பெற்றவராக இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்