சந்திர கிரகணம் 2023..ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று !

May 05, 2023,11:10 AM IST
டில்லி : 2023 ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 05) நிகழ உள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும்.

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் வானியல் நிகழ்வை கிரகணம் என்கிறோம். இது போன்ற நிகழ்வு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை நிகழும். இதில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். அப்போது சந்திரன், அடர் சிவப்பு நிறத்தில் காட்சி தரும். இதற்கு சந்திர கிரகணம் என்று பெயர். பொதுவாக சந்திர கிரகணம், பெளர்ணமி நாளிலும், சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் ஏற்படும்.



சந்திர கிரகணமானது முழு சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகைப்படும். சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் பொழுது நிகழ்வது முழு சந்திர கிரகணம் ஆகும். பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைப்பதற்கு பகுதி நேர சந்திர கிரகணம் என்றும், பூமியின் புற நிழல் வழியாக சந்திரனின் ஒரு பகுதி கடந்து செல்லும் நிகழ்விற்கு பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றும் பெயர்.

பெனுபிரல் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வழக்கமான பெளர்ணமியை போல் ஒளி வீசாமல், இருண்டதாக காணப்படும். இன்று இரவு 08.44 மணிக்கு துவங்கி நள்ளிரவு 01.01 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்க உள்ளது. இரவு 10 மணி 52 நிமிடம் 59 விநாடிகளை கிரகணத்தின் உச்சநேரமாக சொல்கிறார்கள். 

இன்று நிகழும் சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா கண்டங்களில் வசிப்பவர்களால் காண முடியும். பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சந்திர கிரகணம் தெளிவாக தெரியும் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்