கொல்லம் : இந்தியாவில் எத்தனையோ வினோத திருவிழாக்கள் நடக்கும் கோவில்கள் உள்ளன. அப்படி வினோத திருவிழாக்கள், வழிபாட்டு முறைகளுக்கு பெயர் போன மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டன்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சமயவிளக்கு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பகவதி அம்மன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியவள். சமயவிளக்கு திருவிழாவின் சிறப்பம்சமே ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டு, கையில் விளக்கேந்தி, ஊர்வலமாக வந்து பகவதி அம்மனை வழிபடுவது தான்.
ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த கோவிலில் பிறகு ஆண்களும் பெண் வேடமிட்டு வழிபட துவங்கி உள்ளனர். இப்படி வழிபடுவதால் தொழில், வேலை சிறக்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சமயவிளக்கு திருவிழாவானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 19 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் கடைசி இரண்டு நாட்கள், பெரிய யானை மீது அம்ம���் உலா வரும் வைபவம் விடிய விடிய நடைபெறும். இந்த ஊர்வலத்தை கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நீண்ட வரிசையில் நின்று மக்கள் இதனை தரிசனம் செய்வார்கள்.
தமிழகத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் போன்று சமயவிளக்கு திருவிழாவின் போதும், தங்களுக்கென்று அங்கீகாரம் தரும் நாள் என கருதி திருநங்கைகள் பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த திருவிழாவிலும் பெண்களைப் போல் சிறப்பாக அலங்காரம் செய்து கொள்ளும் ஆண் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறார்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}