கொல்லம் : இந்தியாவில் எத்தனையோ வினோத திருவிழாக்கள் நடக்கும் கோவில்கள் உள்ளன. அப்படி வினோத திருவிழாக்கள், வழிபாட்டு முறைகளுக்கு பெயர் போன மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டன்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சமயவிளக்கு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பகவதி அம்மன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியவள். சமயவிளக்கு திருவிழாவின் சிறப்பம்சமே ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டு, கையில் விளக்கேந்தி, ஊர்வலமாக வந்து பகவதி அம்மனை வழிபடுவது தான்.
ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த கோவிலில் பிறகு ஆண்களும் பெண் வேடமிட்டு வழிபட துவங்கி உள்ளனர். இப்படி வழிபடுவதால் தொழில், வேலை சிறக்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சமயவிளக்கு திருவிழாவானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 19 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் கடைசி இரண்டு நாட்கள், பெரிய யானை மீது அம்ம���் உலா வரும் வைபவம் விடிய விடிய நடைபெறும். இந்த ஊர்வலத்தை கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நீண்ட வரிசையில் நின்று மக்கள் இதனை தரிசனம் செய்வார்கள்.
தமிழகத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் போன்று சமயவிளக்கு திருவிழாவின் போதும், தங்களுக்கென்று அங்கீகாரம் தரும் நாள் என கருதி திருநங்கைகள் பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த திருவிழாவிலும் பெண்களைப் போல் சிறப்பாக அலங்காரம் செய்து கொள்ளும் ஆண் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}