சம்பள உயர்வு ரத்து.. போனஸ் கிடையாது..  மாற்றி யோசிக்கும் மைக்ரோசாப்ட்!

May 11, 2023,03:46 PM IST
கலிபோர்னியா:  முழு நேர ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வும்,  போனஸும் கிடையாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்னொரு சுற்று வேலைநீக்க அபாயத்திலிருந்து தற்காலிகமாக  ஊழியர்கள் தப்பியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது மைக்ரோசாப்ட். உலகம் முழுவதும் முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்பட துக்கடா நிறுவனங்கள் வரை பல ஆயிரம் பேர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வேலையிழந்துள்ளனர். இந்த வேலை நீக்கம் என்பது தற்போது தொடர் கதை போல ஆகியுள்ளது. நினைத்தால் வேலையை விட்டு நீக்கி விடும் நிலைக்கு கொண்டு போய் விட்டனர்.



இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்து ஒரு அதிரடியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முழு நேர ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு கிடையாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் போனஸையும் நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா மெயில் அனுப்பியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது தனது முழு கவனத்தையும் செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இதற்காக அது சாட்ஜிபிடி- உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக பல நூறு கோடியையும் அது ஒதுக்கியுள்ளது. மேலும் தனது தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை அது பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேபோல பிங் தேடுதளத்திலும் இதை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்