சம்பள உயர்வு ரத்து.. போனஸ் கிடையாது..  மாற்றி யோசிக்கும் மைக்ரோசாப்ட்!

May 11, 2023,03:46 PM IST
கலிபோர்னியா:  முழு நேர ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வும்,  போனஸும் கிடையாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்னொரு சுற்று வேலைநீக்க அபாயத்திலிருந்து தற்காலிகமாக  ஊழியர்கள் தப்பியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது மைக்ரோசாப்ட். உலகம் முழுவதும் முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்பட துக்கடா நிறுவனங்கள் வரை பல ஆயிரம் பேர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வேலையிழந்துள்ளனர். இந்த வேலை நீக்கம் என்பது தற்போது தொடர் கதை போல ஆகியுள்ளது. நினைத்தால் வேலையை விட்டு நீக்கி விடும் நிலைக்கு கொண்டு போய் விட்டனர்.



இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்து ஒரு அதிரடியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முழு நேர ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு கிடையாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் போனஸையும் நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா மெயில் அனுப்பியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது தனது முழு கவனத்தையும் செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இதற்காக அது சாட்ஜிபிடி- உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக பல நூறு கோடியையும் அது ஒதுக்கியுள்ளது. மேலும் தனது தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை அது பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேபோல பிங் தேடுதளத்திலும் இதை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்