மீண்டும் தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி தம்பதிக்கு 2வது குழந்தை!

Jun 01, 2023,05:04 PM IST
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். அவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது பெண் குழந்தையாகும்.

இந்தத் தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். அதன் பெயர் பிருத்வி ஆகாஷ் அம்பானி. அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்லோகாவுக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்தது.



இந்த தகவலை அம்பானி குடும்பத்து நண்பரும், ராஜ்யசபா உறுப்பினருமான பரிமல் நத்வானியின் மகன் தன்ராஜ் நத்வானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த நீதா அம்பானி கலாச்சார மையத் திறப்பு விழாவின்போதுதான் தான் கர்ப்பமடைந்திருப்பது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் ஸ்லோகா.  அப்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

அந்த விழாவின்போது மேடிட்ட வயிறுடன் அவர் அழகான காஸ்ட்யூமில் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. தனியாக ஒரு போட்டோஷூட்டும் எடுத்திருந்தார் ஸ்லோகா.  இதுதொடர்பான புகைப்படங்களும் அப்போது வைரலாகியிருந்தன.

மீண்டும் தாயாகியுள்ள ஸ்லோகாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்