மீண்டும் தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி தம்பதிக்கு 2வது குழந்தை!

Jun 01, 2023,05:04 PM IST
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். அவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது பெண் குழந்தையாகும்.

இந்தத் தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். அதன் பெயர் பிருத்வி ஆகாஷ் அம்பானி. அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்லோகாவுக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்தது.



இந்த தகவலை அம்பானி குடும்பத்து நண்பரும், ராஜ்யசபா உறுப்பினருமான பரிமல் நத்வானியின் மகன் தன்ராஜ் நத்வானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த நீதா அம்பானி கலாச்சார மையத் திறப்பு விழாவின்போதுதான் தான் கர்ப்பமடைந்திருப்பது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் ஸ்லோகா.  அப்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

அந்த விழாவின்போது மேடிட்ட வயிறுடன் அவர் அழகான காஸ்ட்யூமில் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. தனியாக ஒரு போட்டோஷூட்டும் எடுத்திருந்தார் ஸ்லோகா.  இதுதொடர்பான புகைப்படங்களும் அப்போது வைரலாகியிருந்தன.

மீண்டும் தாயாகியுள்ள ஸ்லோகாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்