மீண்டும் தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி தம்பதிக்கு 2வது குழந்தை!

Jun 01, 2023,05:04 PM IST
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். அவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது பெண் குழந்தையாகும்.

இந்தத் தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். அதன் பெயர் பிருத்வி ஆகாஷ் அம்பானி. அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்லோகாவுக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்தது.



இந்த தகவலை அம்பானி குடும்பத்து நண்பரும், ராஜ்யசபா உறுப்பினருமான பரிமல் நத்வானியின் மகன் தன்ராஜ் நத்வானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த நீதா அம்பானி கலாச்சார மையத் திறப்பு விழாவின்போதுதான் தான் கர்ப்பமடைந்திருப்பது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் ஸ்லோகா.  அப்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

அந்த விழாவின்போது மேடிட்ட வயிறுடன் அவர் அழகான காஸ்ட்யூமில் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. தனியாக ஒரு போட்டோஷூட்டும் எடுத்திருந்தார் ஸ்லோகா.  இதுதொடர்பான புகைப்படங்களும் அப்போது வைரலாகியிருந்தன.

மீண்டும் தாயாகியுள்ள ஸ்லோகாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்