மீண்டும் தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி தம்பதிக்கு 2வது குழந்தை!

Jun 01, 2023,05:04 PM IST
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். அவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது பெண் குழந்தையாகும்.

இந்தத் தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். அதன் பெயர் பிருத்வி ஆகாஷ் அம்பானி. அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்லோகாவுக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்தது.



இந்த தகவலை அம்பானி குடும்பத்து நண்பரும், ராஜ்யசபா உறுப்பினருமான பரிமல் நத்வானியின் மகன் தன்ராஜ் நத்வானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த நீதா அம்பானி கலாச்சார மையத் திறப்பு விழாவின்போதுதான் தான் கர்ப்பமடைந்திருப்பது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் ஸ்லோகா.  அப்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

அந்த விழாவின்போது மேடிட்ட வயிறுடன் அவர் அழகான காஸ்ட்யூமில் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. தனியாக ஒரு போட்டோஷூட்டும் எடுத்திருந்தார் ஸ்லோகா.  இதுதொடர்பான புகைப்படங்களும் அப்போது வைரலாகியிருந்தன.

மீண்டும் தாயாகியுள்ள ஸ்லோகாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்