நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை...மாணவனின் தந்தையும் தற்கொலை

Aug 14, 2023,09:02 AM IST

சென்னை : நீட் தேர்வில் அடைந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்த கொண்ட சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மாணவர் ஜெகதீஸ்வரன். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார். முதல் முறை நீட் தேர்வில் அடைந்த ஜெகதீஸ்வரன், முயற்சியை கை விடாமல் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.



இரண்டு முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகனின் இறப்பை தாங்க முடியாமல் இருந்த ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் மறைவதற்குள் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்