நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை...மாணவனின் தந்தையும் தற்கொலை

Aug 14, 2023,09:02 AM IST

சென்னை : நீட் தேர்வில் அடைந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்த கொண்ட சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மாணவர் ஜெகதீஸ்வரன். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார். முதல் முறை நீட் தேர்வில் அடைந்த ஜெகதீஸ்வரன், முயற்சியை கை விடாமல் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.



இரண்டு முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகனின் இறப்பை தாங்க முடியாமல் இருந்த ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் மறைவதற்குள் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்