நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை...மாணவனின் தந்தையும் தற்கொலை

Aug 14, 2023,09:02 AM IST

சென்னை : நீட் தேர்வில் அடைந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்த கொண்ட சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மாணவர் ஜெகதீஸ்வரன். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார். முதல் முறை நீட் தேர்வில் அடைந்த ஜெகதீஸ்வரன், முயற்சியை கை விடாமல் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.



இரண்டு முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகனின் இறப்பை தாங்க முடியாமல் இருந்த ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் மறைவதற்குள் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்