நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்.. இனி சோழவந்தானில் நிற்கும்.. மக்களே ஹேப்பிதானே!

Jul 12, 2023,02:56 PM IST
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு முக்கிய ரயில்களும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் கோடிப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், பல முக்கிய நிலையங்களில் நிற்பது இல்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வேத் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பல முக்கிய ரயில்கள் சில முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி சோழவந்தானில் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் ஏற்கனவே இந்த ரயில் சோழவந்தானில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.




சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் இனி  திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி நேரடியாக திருமங்கலத்திலேயே போய் இறங்கிச் செல்லலாம். மதுரையில் இறங்கத் தேவையில்லை.

சென்னை எழும்பூர் - கொல்லம்  இடையிலான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இனி ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை, பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், கூடுதலாக  கீழ்க்கடையம், குண்டாரா ஆகிய  நிலையங்களில் நின்று செல்லும்.  பாலருவி எக்ஸ்பரிஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் கூடுதலாக பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் - பனாரஸ் இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நின்று செல்லும். அதேபோல கோவை - ராமேஸ்வரம்  இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவை தற்காலிக மாற்றம்தான். பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இவை நிரந்தரமாக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

news

தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்

news

முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்

news

தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்

news

அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

news

விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக

news

ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

news

ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்