நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்.. இனி சோழவந்தானில் நிற்கும்.. மக்களே ஹேப்பிதானே!

Jul 12, 2023,02:56 PM IST
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு முக்கிய ரயில்களும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் கோடிப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், பல முக்கிய நிலையங்களில் நிற்பது இல்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வேத் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பல முக்கிய ரயில்கள் சில முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி சோழவந்தானில் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் ஏற்கனவே இந்த ரயில் சோழவந்தானில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.




சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் இனி  திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி நேரடியாக திருமங்கலத்திலேயே போய் இறங்கிச் செல்லலாம். மதுரையில் இறங்கத் தேவையில்லை.

சென்னை எழும்பூர் - கொல்லம்  இடையிலான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இனி ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை, பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், கூடுதலாக  கீழ்க்கடையம், குண்டாரா ஆகிய  நிலையங்களில் நின்று செல்லும்.  பாலருவி எக்ஸ்பரிஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் கூடுதலாக பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் - பனாரஸ் இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நின்று செல்லும். அதேபோல கோவை - ராமேஸ்வரம்  இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவை தற்காலிக மாற்றம்தான். பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இவை நிரந்தரமாக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்