நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்.. இனி சோழவந்தானில் நிற்கும்.. மக்களே ஹேப்பிதானே!

Jul 12, 2023,02:56 PM IST
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு முக்கிய ரயில்களும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் கோடிப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், பல முக்கிய நிலையங்களில் நிற்பது இல்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வேத் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பல முக்கிய ரயில்கள் சில முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி சோழவந்தானில் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் ஏற்கனவே இந்த ரயில் சோழவந்தானில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.




சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் இனி  திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி நேரடியாக திருமங்கலத்திலேயே போய் இறங்கிச் செல்லலாம். மதுரையில் இறங்கத் தேவையில்லை.

சென்னை எழும்பூர் - கொல்லம்  இடையிலான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இனி ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை, பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், கூடுதலாக  கீழ்க்கடையம், குண்டாரா ஆகிய  நிலையங்களில் நின்று செல்லும்.  பாலருவி எக்ஸ்பரிஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் கூடுதலாக பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் - பனாரஸ் இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நின்று செல்லும். அதேபோல கோவை - ராமேஸ்வரம்  இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவை தற்காலிக மாற்றம்தான். பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இவை நிரந்தரமாக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்