"தீபாவளி புக்கிங்"... என்னண்ணே சொல்றீங்க.. பாண்டியன்ல டிக்கெட் தீர்ந்து போச்சா!

Jul 12, 2023,02:30 PM IST
சென்னை: தீபாவளியையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால் வழக்கம் போல இப்போதும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. பெரும்பாலானவர்கள் ஆன்லைன் புக்கிங்கில் டிக்கெட்களை முன்பதிவு செய்து விட்டனர்.

மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி செல்லும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுகள் விற்று விட்டன. இதே நிலைதான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும்.




பகல் நேரத்தில் செல்லக் கூடிய வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் 2ம் வகுப்பு டிக்கெட்கள் கொஞ்சம் காலியாக உள்ளன. முக்கிய ரயில்களில் டிக்கெட்கள் தீர்ந்து விட்டதால் அடுத்து சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் அதிகம் இருந்தபோதிலும் மக்கள் புக் செய்து வைத்துள்ளனர். கடைசி நேரத்தில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

நவம்பர் 12ம் தேதிதான் தீபாவளி வருகிறது. ஆனால் இப்போதே புக்கிங்கில் மக்கள் மும்முரமாகி விட்டனர். அதிலும் சில நிமிடங்களிலேயே முக்கிய ரயில்களில் டிக்கெட்கள் தீர்ந்து போனது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்