சூப்பர் இளமைத் தோற்றத்தில் நித்தியானந்தா.. நல்லா மெலிஞ்சிருக்காரே.. தாடியையும் காணோம்!

Feb 26, 2023,09:13 AM IST
சென்னை: நித்தியானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் இதுவரை சரியாக தெரியவில்லை... அவருக்காக பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் காத்துள்ளன.. ஆனால் அவரோ கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக கூறி தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருக்கிறார்.

சமூக வளைதளங்களில் கைலாசா குறித்த அப்டேட்டுக்களை தினசரி சுடச் சுட போட்டுக் கொண்டே இருக்கிறது நித்தியானந்தா டீம். அவரது உரைகள், "கைலாசா"வில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பூஜைகள் உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது ஏதாவது அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.



திடீர் திடீரென சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளைக் கொடுத்து அசர வைத்து வருகிறது நித்தியானந்தா டீம். கைலாசா நாட்டுக்கும், தென் ஆப்பிரிக்காவின் டிலாமினி அரசுக்கும் இடையே தூதரக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு டிவீட் கூறியது. இந்த டிலாமினி அரசு எங்கிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது.  அந்த டிலாமினி அரசும், கைலாசா அரசைப் போலவே கண்ணுக்குத் தெரியாத  அரசாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன், கைலாசா நாட்டுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டு "என்னங்கடா நடக்குது" என்ற கேள்வியை எல்லோருக்குள்ளும் எழுப்பினார் நித்தியானந்தா.  இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களும் கூட மக்களை அட என்று ஆச்சரியப்பட வைத்தன. எப்படி இதையெல்லாம் நித்தியானந்தாவால் செய்ய முடிகிறது.. உண்மையில் அவர் என்னதான் செய்கிறார், எங்குதான் இருக்கிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் சமீபத்திய நித்தியானந்தாவின் போட்டோக்கள் மிக மிக இளமையாக இருக்கின்றன. இவையெல்லாம் புதிய படங்களா அல்லது பழைய படங்களா எனறு தெரியவில்லை. வழக்கமாக தாடி மீசையுடன் கூடிய படமும், வீடியோவும்தான் அதிகமாக வரும். அதில் சற்று பூசினாற் போலவும் இருப்பார் நித்தியானந்தா. ஆனால் சமீப காலமாக வெளியாகும் படங்களில் மிகவும் மெலிந்திருக்கிறார்.. தாடி மீசையும் இல்லை. மொத்தமாக வழித்திருக்கிறார். தலைமுடியும் அடர்த்தியாக இல்லை. பார்க்க சம்மர் கட் போல இருக்கிறது. ஒரு வேளை கைலாசாவில் வெயில் காலமோ என்னவோ தெரியவில்லை.



ஜெனீவாவில் உள்ள ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் கூட்ட அரங்கில் நித்தியானந்தா கட் அவுட்டை வைத்து "கைலாசாவின் தூதர்" அதை வணங்குவது போலவும் ஒரு போட்டோ போட்டுள்ளனர்.. இது ஐ.நா.வுக்குத் தெரியுமா என்பதுதான் பலருடைய கேள்வியாக உள்ளது!

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்