சூப்பர் இளமைத் தோற்றத்தில் நித்தியானந்தா.. நல்லா மெலிஞ்சிருக்காரே.. தாடியையும் காணோம்!

Feb 26, 2023,09:13 AM IST
சென்னை: நித்தியானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் இதுவரை சரியாக தெரியவில்லை... அவருக்காக பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் காத்துள்ளன.. ஆனால் அவரோ கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக கூறி தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருக்கிறார்.

சமூக வளைதளங்களில் கைலாசா குறித்த அப்டேட்டுக்களை தினசரி சுடச் சுட போட்டுக் கொண்டே இருக்கிறது நித்தியானந்தா டீம். அவரது உரைகள், "கைலாசா"வில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பூஜைகள் உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது ஏதாவது அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.



திடீர் திடீரென சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளைக் கொடுத்து அசர வைத்து வருகிறது நித்தியானந்தா டீம். கைலாசா நாட்டுக்கும், தென் ஆப்பிரிக்காவின் டிலாமினி அரசுக்கும் இடையே தூதரக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு டிவீட் கூறியது. இந்த டிலாமினி அரசு எங்கிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது.  அந்த டிலாமினி அரசும், கைலாசா அரசைப் போலவே கண்ணுக்குத் தெரியாத  அரசாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன், கைலாசா நாட்டுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டு "என்னங்கடா நடக்குது" என்ற கேள்வியை எல்லோருக்குள்ளும் எழுப்பினார் நித்தியானந்தா.  இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களும் கூட மக்களை அட என்று ஆச்சரியப்பட வைத்தன. எப்படி இதையெல்லாம் நித்தியானந்தாவால் செய்ய முடிகிறது.. உண்மையில் அவர் என்னதான் செய்கிறார், எங்குதான் இருக்கிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் சமீபத்திய நித்தியானந்தாவின் போட்டோக்கள் மிக மிக இளமையாக இருக்கின்றன. இவையெல்லாம் புதிய படங்களா அல்லது பழைய படங்களா எனறு தெரியவில்லை. வழக்கமாக தாடி மீசையுடன் கூடிய படமும், வீடியோவும்தான் அதிகமாக வரும். அதில் சற்று பூசினாற் போலவும் இருப்பார் நித்தியானந்தா. ஆனால் சமீப காலமாக வெளியாகும் படங்களில் மிகவும் மெலிந்திருக்கிறார்.. தாடி மீசையும் இல்லை. மொத்தமாக வழித்திருக்கிறார். தலைமுடியும் அடர்த்தியாக இல்லை. பார்க்க சம்மர் கட் போல இருக்கிறது. ஒரு வேளை கைலாசாவில் வெயில் காலமோ என்னவோ தெரியவில்லை.



ஜெனீவாவில் உள்ள ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் கூட்ட அரங்கில் நித்தியானந்தா கட் அவுட்டை வைத்து "கைலாசாவின் தூதர்" அதை வணங்குவது போலவும் ஒரு போட்டோ போட்டுள்ளனர்.. இது ஐ.நா.வுக்குத் தெரியுமா என்பதுதான் பலருடைய கேள்வியாக உள்ளது!

சமீபத்திய செய்திகள்

news

மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!

news

ஆசிரியர்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்