உள்ளுக்குள் சோகம் இருந்தாலும்.. தோனிக்கு "பிராம்ப்ட்"டாக வாழ்த்து சொன்ன ஓ.பி. ரவீந்திரநாத்

Jul 07, 2023,11:44 AM IST
சென்னை: தேனி தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிர வைக்கும் தீர்ப்பு கொடுத்துள்ள போதிலும் கூட அந்த சோகத்தை மறைத்துக் கொண்டு தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் தேனி எம்.பி.யாக உள்ள ஓ.பி. ரவீந்திரநாத்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவருமான தோனிக்கு இன்று பிறந்த நாளாகும். இதையடுத்து அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சூப்பராக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன.



முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல தரப்பினரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினர், கிரிக்கெட் உலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என வாழ்த்து மழை பொழிந்து கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஓ.பி. ரவீந்திரநாத்தும் தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓ.பி. ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  உலக கிரிக்கெட் அரங்கில்  தனக்கென தனியிடம் பிடித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், எனது அன்பு நண்பர் திரு.மகேந்திர சிங்  தோனி 
அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, நீண்ட ஆயுளோடு கிரிக்கெட் விளையாட்டில் மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று கூறியுள்ளார் ரவீந்திரநாத்.

நேற்றுதான் அவரது எம். பி தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிர வைக்கும் தீர்ப்பை அளித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கூட மீளாத நிலையில் இருந்தாலும் கூட, தோனிக்கு ஓடி வந்து சூப்பராக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் ஓ.பி. ரவீந்திரநாத். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்