"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!

Feb 13, 2023,11:45 AM IST
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அவர் கூறுகையில், தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக இலங்கை மக்கள் வெடித்து எழுந்து போராட்டம் நடத்தும் இந்த சூழலில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையாக இருக்கும். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி. 

அவரை பற்றி இதுவரை பரப்பப்பட்ட யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இது முற்றுப்புள்ளியாக அமையும். தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க உள்ளார். தமிழின மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக இலங்கையை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.



இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தும் அபாய நிலை உள்ளது. இதனால் தமிழக மக்கள், பிரபாகரனுக்கு துணை நிற்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு உள்ளது. அந்த தொடர்பின் மூலம் நான் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது. ஆனால் அவர் விரைவில் வெளிப்படுவார் என தெரிவித்தார்.

2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கொல்லப்பட்ட இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரனின் மரணத்திற்கு பிறகு இலங்கையில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. விடுதலை புலிகள் இயக்கம் தற்போது இலங்கையில் கிடையாது என்று கூட அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்நிலையில் கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாகரன் தற்போதும் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்