50 வயதில் அப்பா.. "செம சநதோஷமா இருக்கு".. பிரபு தேவா ஓப்பன் டாக்!

Jun 14, 2023,10:41 AM IST
சென்னை : நடிகரும், நடன இயக்குனரும், டைரக்டருமான பிரபுதேவா தனது 50 வது வயதில் பெண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ளதாக கடந்த சில நாட்களாக மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது பற்றி தான் எப்படி உணர்கிறார் என்பது பற்றி பிரபு தேவா ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பிரபு தேவா கூறுகையில், உண்மை தான். இந்த வயதில் நான் மீண்டும் அப்பா ஆகி உள்ளேன். மிக மிக மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உணர்கிறேன். ஏற்கனவே எனது வேலைகளை குறைத்து கொண்டு விட்டேன். வேலை வேலை என அதிகமாக ஓடிக் கொண்டே இருந்து விட்டேன். இனியாவது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.



நடிகர் பிரபுதேவாவிற்கு ரமலத் என்பவருடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 2011 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு பிறகு நடிகை நயன்தாராவை காதலிப்பதாகவும், அவரை பிரபு தேவா திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென அவர்களின் காதல் பிரேக் அப் ஆனது. பிறகு நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவா, நயன்தாராவுடனான காதல் பிரேக் அப் ஆன பிறகு 2020 ம் ஆண்டு ஹிமானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் குடும்பத்தில் முதல் பெண் வாரிசு இந்த குழந்தை தானாம். இதனால் குடும்பமே இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்