50 வயதில் அப்பா.. "செம சநதோஷமா இருக்கு".. பிரபு தேவா ஓப்பன் டாக்!

Jun 14, 2023,10:41 AM IST
சென்னை : நடிகரும், நடன இயக்குனரும், டைரக்டருமான பிரபுதேவா தனது 50 வது வயதில் பெண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ளதாக கடந்த சில நாட்களாக மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது பற்றி தான் எப்படி உணர்கிறார் என்பது பற்றி பிரபு தேவா ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பிரபு தேவா கூறுகையில், உண்மை தான். இந்த வயதில் நான் மீண்டும் அப்பா ஆகி உள்ளேன். மிக மிக மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உணர்கிறேன். ஏற்கனவே எனது வேலைகளை குறைத்து கொண்டு விட்டேன். வேலை வேலை என அதிகமாக ஓடிக் கொண்டே இருந்து விட்டேன். இனியாவது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.



நடிகர் பிரபுதேவாவிற்கு ரமலத் என்பவருடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 2011 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு பிறகு நடிகை நயன்தாராவை காதலிப்பதாகவும், அவரை பிரபு தேவா திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென அவர்களின் காதல் பிரேக் அப் ஆனது. பிறகு நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவா, நயன்தாராவுடனான காதல் பிரேக் அப் ஆன பிறகு 2020 ம் ஆண்டு ஹிமானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் குடும்பத்தில் முதல் பெண் வாரிசு இந்த குழந்தை தானாம். இதனால் குடும்பமே இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்