ஜனாதிபதி திரெளபதி முர்முவின் முதல் தமிழக வருகை : மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்களுக்குத் தடை

Feb 16, 2023,10:11 AM IST
மதுரை : ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வர உள்ளார். இதனை முன்னிட்டு மதுரையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.



மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவையில் நடைபெற இருக்கும் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிப்ரவரி 18 ம் தேதியன்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வர உள்ளார். 




மதுரை விமான நிலையத்தில் இருந்து, பகல் 12 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு மதுரையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, கோவை செல்லும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளார். பிறகு மீண்டும் பிப்ரவரி 19 ம் தேதி தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு செல்ல உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்