அரச குடும்பத்தில்  புகைச்சல்.. ஆஹா.. "நாஸ்டிரடாமஸ்" ஜோசியம் பலிக்க ஆரம்பிச்சிருச்சு போலயே!

Jan 03, 2023,12:34 PM IST

லண்டன் : கருத்து வேறுபாடு காரணமாக இங்கிலாந்து அரச குடும்ப வாரிசான இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் 2020 ம் ஆண்டே அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டனர். மீடியாக்கள், அரச வாழ்க்கை என அனைத்தில் இருந்தும் விலகி அமெரிக்காவில் புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 


ஆனாலும் தற்போது வரை அரச குடும்பத்தினர் தங்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தாலும் ஹேரி பற்றி செய்திகள் மீடியாக்களில் மிக குறைவாகவே வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மறைந்தார்.




அவரது இறுதி சடங்கில் ஹேரி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மீடியாக்களின் பார்வை ஹேரி பக்கம் திரும்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்பாவும், சகோதரரும் எனக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் என்னுடன் சமாதானம் பேச தயாராக இல்லை என்றார். 


ஹேரியின் முழு பேட்டி ஜனவரி 8 ம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 10 ம் தேதி Spare தலைப்பில் ஹேரி எழுதி உள்ள சுயசரிதை வெளியாக உள்ளது. நிச்சயம் இதில் அரசு குடும்பம் பற்றிய பல முக்கிய தகவல்களை அவர் குறிப்பிட்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஹேரியின் முழு பேட்டி மற்றும் சுயசரிதை எப்போது வரும், அதில் என்னவெல்லாம் சொல்லி இருப்பார் என தெரிந்து கொள்ள உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

2023 ம் ஆண்டு எப்படி இருக்கும் என 500 வருடங்களுக்கு முன்பே பிரபல ஜோதிடர் நாஸ்டிரடாமஸ் கணித்த குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்து அரண்மனையில் மிகப் பெரிய தீ பற்றி எரியும் என குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை நாஸ்டிரடாமஸ் சொன்ன தீ தான் ஹேரி பேட்டி மூலம் புகைய ஆரம்பித்திருக்கிறதோ!!

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்