ராசிபுரம் திமுக கவுன்சிலர் தேவிப்பிரியா குடும்பத்துடன் தற்கொலை

Jul 12, 2023,12:43 PM IST
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் தேவிப்பிரியா தனது கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் நகராட்சியின் 13வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தவர் தேவிப்பிரியா. 45 வயதாகும் இவரது கணவர் பெயர் அருண்லால். இவர் திமுக நகர செயலாளராக இருந்து வந்தார். நகைக்கடையும் நடத்தி வந்தார். இவர்களுக்கு  18 வயதில் மோனிஷா என்ற மகள் உள்ளார்.




இந்த மூன்று பேரும் இன்று காலை தங்களது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். கணவனும் மனைவியும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளனர். மகள் மோனிஷா விஷம் குடித்து இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பேரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அருண்லால் தனது வியாபாரத்திற்காக பெருமளவில் கடன் வாங்கியிருந்ததாக ஒரு தகவல் உலா வருகிறது. கடனை அடைக்க முடியாமல் மனைவி, மகளுடன் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில்தான் கோவையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்த சம்பவம் கொங்கு மண்டலப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக கவுன்சிலர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்