உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற ஐநாவில் தீர்மானம்.. இந்தியா நடுநிலை!

Feb 24, 2023,01:02 PM IST
ஜெனிவா : உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறக் கோரி ஐநா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை கணிக்க முடியாமல் உலக நாடுகள் குழம்பி உள்ளன.

2014 ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் அவ்வப் போது உக்ரைன் பகுதியில் தாக்குதல்களை நடத்தி வந்தது. 2022 ம் ஆண்டு முதல் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை இனியும் தொடர வேண்டாம் என்பதால் போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா பொதுசபை மற்றும் உலக நாடுகள் பலவும் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.




சமீபத்தில் அமெரிக்கா உடனான அணுஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா வெளியேறியது. அப்போது உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாமிர் புடின், உக்ரைன் உடனான போரை ஒரு போதும் நிறுத்த போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக இதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐநா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் ரஷ்யா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 7 நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. அதே சமயம் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அதிகப்படியான நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததால், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்