உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற ஐநாவில் தீர்மானம்.. இந்தியா நடுநிலை!

Feb 24, 2023,01:02 PM IST
ஜெனிவா : உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறக் கோரி ஐநா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை கணிக்க முடியாமல் உலக நாடுகள் குழம்பி உள்ளன.

2014 ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் அவ்வப் போது உக்ரைன் பகுதியில் தாக்குதல்களை நடத்தி வந்தது. 2022 ம் ஆண்டு முதல் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை இனியும் தொடர வேண்டாம் என்பதால் போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா பொதுசபை மற்றும் உலக நாடுகள் பலவும் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.




சமீபத்தில் அமெரிக்கா உடனான அணுஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா வெளியேறியது. அப்போது உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாமிர் புடின், உக்ரைன் உடனான போரை ஒரு போதும் நிறுத்த போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக இதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐநா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் ரஷ்யா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 7 நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. அதே சமயம் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அதிகப்படியான நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததால், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்