சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசு விரைந்து நிறைவேற்றக்கோரி சட்டசபையில் தீர்மானம்

Jan 12, 2023,02:14 PM IST
சென்னை : சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி 12) சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசித்தார்.



ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது : பாக் நீரினையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர் தான் சேது சமுத்திரத் திட்டம். 1963 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்த போதும், கலைஞர்  ஆட்சியில் இருந்த போதும் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த திட்டத்தால் வர்த்தகம் பெருகும், மீனவர்களின் வாழ்க்கை செழிக்கும். தமிழகம் வளம் பெறும் என எடுத்துரைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. 2004 ல் மத்தியில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திட்டப் பணிகள் பாதியளவு முடிப்த நிலையில் பாஜக அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இந்த திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டார்.

இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என மத்திய பாஜக அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்து எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இந்த நிலைப்பாட்டிற்கு பாஜக அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என கூறி தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த தீர்மானம் பின்னர் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்