சனி ஜெயந்தி : மூன்று சக்திகள் ஒன்றாகும் இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

May 19, 2023,10:55 AM IST
சென்னை : மே 19ம் தேதியான இன்று வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை ஆகும். நவகிரகங்களில் பலம் வாய்ந்த கிரகமாக கருதப்படும் சனி பகவான் அவதரித்தது இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. 

அதனால் இந்த நாளை சனி ஜெயந்தி என்றும், சனி அமாவாசை என்றும் அழைக்கிறோம். முன்னோர் வழிபாட்டிற்கு உரிய அமாவாசை நாளில் சனி வழிபாட்டையும் மேற்கொண்டால் ஆரோக்கியம், ஆயுள் பலம், செல்வ நலன்கள் ஆகியவற்றை பெறலாம்.

இந்த ஆண்டு வைகாசி மாத அமாவாசையானது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம், இந்த ஆண்டு அமாவாசை, சனி ஜெயந்தி, முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமான கிருத்திகை ஆகிய மூன்றும் ஒரே நாளில் அமைகின்றன. அதுவும் இவை மூன்று மங்கலகரமான வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பானது.



பீகார், பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இந்த நாளில் சுமங்கலி பெண்கள், சாவித்ரி விரதம் கடைபிடிப்பார்கள். இவ்வாறு விரதம் இருந்து சனி பகவானையும், சாவித்ரி தேவியையும் வழிபட்டால் தங்கள் கணவரின் ஆயும் நீடிக்கும் என்பது நம்பிக்கை. ஒருவரின் ஜாதகத்தில் ஆயுளை நிர்ணயிக்கக் கூடியவர் சனி பகவான். அதனாலேயே இவரை ஆயுட்காரகன் என்கிறோம்.

இந்த நாளில் புனித நீர் நிலைகள், நதிகளில் நீராடுவது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியது. இந்த நாளில் தான, தர்மங்கள் செய்வது, அன்னதானம் செய்வது, பசு, காகம் ஆகியவற்றிற்கு உணவளிப்பது இன்னும் பல மடங்கு அதிகமான புண்ணியத்தை தரும். 

அமாவாசை திதியானது மே 18 ம் தேதி இரவு 10.09 மணிக்கு துவங்கி, மே 19 ம் தேதி இரவு 09.47 மணி வரை உள்ளது. காலை 07.54 மணிக்கு பிறகு கிருத்திகை திதியும் துவங்குகிறது. இன்றைய நாளில் அதிகாலையில் எழுந்து, புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வழிபடுவது பல ஜென்மங்களில் செய்த பாவம் தீரும்.

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்