Spirituality: யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் ?

Jan 23, 2023,12:18 PM IST
நன்கு வேதம் கற்ற அந்தணர்கள் நான்கு பேசிக் கொண்டிருந்தார்கள். யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது பற்றி நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான்கு பேருமே தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றும் சொல்லிக் கொண்டார்கள். இந்த உரையாடல் ஒரு கட்டத்தில் தீவிரமான விவாதம் ஆனது. 



அப்போது முதலாம் நபர், நான் வேதங்கள் அனைத்தும் படித்திருப்பதால் தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றார். இரண்டாவது நபர், நான் வேத மந்திரகளை முறைப்படி கற்றிருப்பது மட்டுமல்ல அதன் பொருள் உணர்ந்து தற்போதும் அதை தொடர்ந்து வருவதால் தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றார்.

மூன்றாம் நபர், நான் வேத மந்திரகங்களின் பொருள் உணர்ந்து, மற்றவர்களுக்கு உரிய முறையில் வேதங்களில் சொல்லிய படி உதவிய செய்து வருகிறேன். அதனால் எனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றார். நான்காவது நபர், நான் முறைப்படி கர்மங்களை செய்து, அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருவதால் தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்த நான்கு அந்தணர்களின் பேச்சுக்களையும் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் அவர்களிடம் வந்து, "நான் போனால் போகலாம்" என கூறி விட்டு தனது பாதையில் நடக்கதுவங்கினார். நான்கு அந்தணர்களும் ஒன்றும் புரியாமல் அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்று, நாங்கள் வேதம் கற்றுள்ளோம் அதனால் சொர்க்கத்திற்கு செல்வோம் என உறுதியாக சொல்கிறோம். உனக்கு என்ன தெரியும் என்று போனால் போகலாம் என்று கூறி விட்டு செல்கிறாய் என கேட்டனர்.

இப்படி கேட்டதும் அந்த அந்தணர்களை பார்த்து அந்த மூதாட்டி சிரிக்க துவங்கினார். "வேதம் எல்லாம் படித்துள்ளேன் என்றீர்கள். இந்த சாதாரண மூதாட்டி சொல்லுக்கு அர்த்தம் கூட புரியவில்லையா உங்களுக்கு? நான் என நான் குறிப்பிட்டது என்னை அல்ல. நான் என்ற ஆணவம், அகந்தையை. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டொழித்து. சகலமும் அவனே என உணர்ந்து சரணாகதி அடைந்தால் சொர்க்கத்திற்கு போகலாம்" என மூதாட்டி சொன்னதும் அந்தணர்களுக்கு தலைகுனிந்து நின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்