பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு

Feb 04, 2023,02:53 PM IST
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், நுங்கபாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இவருக்கு சமீபத்தில் பத் பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.  இவரது உயிரிழப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. 



77 வயதாகும் வாணி ஜெயராம் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தென்னிந்திய மொழி சினிமாக்களில் பாடி வருகிறார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணி பாடி உள்ளார். இது தவிர தனிப்பாடல்கள், பக்திப் பாடல்கள் என 10,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழி சினிமாக்களில் இவர் பாட உள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்காக மூன்று முறை தேசிய விருது வாங்கி உள்ளார். ஆந்திரா, தமிழ்நாடு என மாநில அரசு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 2012 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பின் சார்பில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது சொந்த பெயர் கலைவாணி ஆகும். வாணி என அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் தனது எட்டாவது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவில் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்த இவர் ஸ்டேட் வங்கியில் 1967 களில் பணியாற்றி உள்ளார். வாணி ஜெயராம், தெலுங்கு சினிமாவிலேயே முதலில் பாட துவங்கினார். தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிரபலமான பிறகே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் தாயும் சேயும் என்ற பாடத்திற்காகவே இவர் முதன் முதலில் பின்னணி பாடினார். ஆனால் அந்த பாடல் வெளியாகவில்லை. பிறகு 1973 ல் வீட்டுக்கு வந்த மருமகள் என்ற படத்திற்காக டிஎம்எஸ் உடன் இணைந்து பாடிய ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலே தமிழிலில் இவர் பாடி வெளிவந்த முதல் பாடலாகும். டிஎம்எஸ். யேசுதாஸ், எஸ்பிபி, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்