பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு

Feb 04, 2023,02:53 PM IST
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், நுங்கபாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இவருக்கு சமீபத்தில் பத் பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.  இவரது உயிரிழப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. 



77 வயதாகும் வாணி ஜெயராம் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தென்னிந்திய மொழி சினிமாக்களில் பாடி வருகிறார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணி பாடி உள்ளார். இது தவிர தனிப்பாடல்கள், பக்திப் பாடல்கள் என 10,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழி சினிமாக்களில் இவர் பாட உள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்காக மூன்று முறை தேசிய விருது வாங்கி உள்ளார். ஆந்திரா, தமிழ்நாடு என மாநில அரசு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 2012 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பின் சார்பில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது சொந்த பெயர் கலைவாணி ஆகும். வாணி என அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் தனது எட்டாவது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவில் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்த இவர் ஸ்டேட் வங்கியில் 1967 களில் பணியாற்றி உள்ளார். வாணி ஜெயராம், தெலுங்கு சினிமாவிலேயே முதலில் பாட துவங்கினார். தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிரபலமான பிறகே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் தாயும் சேயும் என்ற பாடத்திற்காகவே இவர் முதன் முதலில் பின்னணி பாடினார். ஆனால் அந்த பாடல் வெளியாகவில்லை. பிறகு 1973 ல் வீட்டுக்கு வந்த மருமகள் என்ற படத்திற்காக டிஎம்எஸ் உடன் இணைந்து பாடிய ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலே தமிழிலில் இவர் பாடி வெளிவந்த முதல் பாடலாகும். டிஎம்எஸ். யேசுதாஸ், எஸ்பிபி, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்