சிவகார்த்திகேயன் மகனா இது.. பார்த்தவுடன் வசீகரிக்கும்.. சூப்பர் க்யூட் போட்டோஸ்!

Jul 12, 2023,04:48 PM IST
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள், மகனுடன் இருக்கும் குடும்பப் படங்களை வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது.



சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தாஸ் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மிகவும் சிம்பிளான மனிதர் சிவகார்த்திகேயன். எந்த பந்தாவும் பண்ணாமல் வலம் வரக் கூடிய வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது குடும்பத்தை பெரிய அளவில் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அவர்களை தர்மசங்கப்படுத்துவதில்லை. அதேசமயம் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அவரது மனைவி வந்து செல்வது வழக்கம்.



சிறப்பு தருணங்களில் தனது குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். பொங்கல், தீபாவளிக்கு போட்டோ எடுத்து வெளியிடுவார். இந்த நிலையில் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் இணைந்து க்யூட்டான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளர் சிவகார்த்திகேயன்.



குகன் பிறந்த நாளையொட்டி எடுக்கப்பட்ட போட்டோஷூட் இது. இதில் குகன் படு ஜாலியாக அப்பா, அம்மாவின் கைகளில் தவழ்கிறார். அதேபோல அக்கா ஆராதனாவுடனும் ஜாலியாக போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார்.  அப்பாவும், பிள்ளைகளும் வெள்ளை நிற டிரஸ்ஸில் இருக்க, அம்மா ஆர்த்தி பிரவுன் கலர் குர்தாவில் காணப்படுகிறார்.




சிவகார்த்திகேயன்  - ஆர்த்திக்கு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு ஆராதனா பிறந்தார். 2021ல் குகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து மகள் ஆராதனா சினிமாவில் பாட்டும் பாடியுள்ளார்.

Images: Sivakarthikeyan Instagram

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்