சென்னை : தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷிவ்தாஸ் மீனா சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகள் என பல மொழிகள் தெரிந்த இவர் 1989 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
காஞ்சிபுரத்தில் சப் கலெக்டராக பயிற்சியை துவங்கிய இவர் கோவில்பட்டி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி சப் கலெக்டர், கூடுதல் கலெக்டர், கலெக்டர் என படிப்படியாக உயர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியாற்றி உள்ளார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}