தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம்

Jun 29, 2023,02:26 PM IST

சென்னை : தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 



ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷிவ்தாஸ் மீனா சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகள் என பல மொழிகள் தெரிந்த இவர் 1989 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.


காஞ்சிபுரத்தில் சப் கலெக்டராக பயிற்சியை துவங்கிய இவர் கோவில்பட்டி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி சப் கலெக்டர், கூடுதல் கலெக்டர், கலெக்டர் என படிப்படியாக உயர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியாற்றி உள்ளார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்