தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம்

Jun 29, 2023,02:26 PM IST

சென்னை : தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 



ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷிவ்தாஸ் மீனா சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகள் என பல மொழிகள் தெரிந்த இவர் 1989 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.


காஞ்சிபுரத்தில் சப் கலெக்டராக பயிற்சியை துவங்கிய இவர் கோவில்பட்டி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி சப் கலெக்டர், கூடுதல் கலெக்டர், கலெக்டர் என படிப்படியாக உயர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியாற்றி உள்ளார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்