ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்ற கொலைவெறி கும்பல்...ம.பி.,யில் பயங்கரம்

May 05, 2023,04:55 PM IST
போபால் : மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேரை, கொலை வெறி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மொரினா பகுதியில் நிலத் தகராறு சுற்றி, வன்முறையாக மாறிதன் விளைவாக 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இந்த மோதலில் படுகாயம் அடைந்துள்ளனர். 

தீர் சிங் தோமர் மற்றம் கஜேந்திர சிங் தோமர்  ஆகியோரின் குடும்பங்களுக்கு இடையே நிலத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக 2013 ம் ஆண்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றியதில் தீர் சிங் தோமரின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரை , கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கொலை செய்தனர். இதனால் கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.



இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டிற்கு வெளியே இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர். இதனையடுத்து கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் இன்று ஊருக்குள் திரும்பி வந்தனர். ஊருக்குள் வந்த அவர்கள் மீது தீர் சிங் தோமரின் குடும்பத்தினர் முதலில் கட்டைகளை வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். பிறகு நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பழைய பகையே இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு காரணம் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் செய்த கொலைக்கு பழிவாங்குவதற்காக சமரசம் பேசுவதை போல் பேசி, கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினரை ஊருக்குள் வரவழைத்து, தீர் சிங் தோமரின் குடும்பம் பழிக்கு பழி வாங்கி உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர துப்பாக்கிச் சூடு, கொலையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்