இன்று ஸ்ரீ ராம நவமி... செல்வ வளம் சேர்க்கும் ராமர் வழிபாடு

Mar 30, 2023,12:11 PM IST
சென்னை : மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஏழாவதும், மிக முக்கியமானதுமானது ஸ்ரீ ராம அவதாரம் தான். மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என வேதங்களும், சாஸ்திரங்களும் வழிகாட்டுகின்றன. ஆனால் அவற்றின் வழியில் நடப்பது யாராலும் முடியாது என அனைவரும் நினைக்கிறோம். ஆனால் வேதங்களில் சொன்ன அறத்தை பின்பற்றி, எத்தனை துன்பங்கள் வந்தாலும் நீதிநெறி தவறாமல் வாழ முடியும் என தெய்வமே மனிதனாக அவதாரம் எடுத்து, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராம பிரான்.

ஒரு மனைவி, ஒரு வில், ஒரு சொல் என வாழ்ந்தவர் ஸ்ரீராமர். அரசாட்சி, சகோதர பாசம், நட்பு, பெற்றோர்களை மதிப்பது, மனைவி மீதான பாசம், வீரம், பொறுமை, கருணை என அனைத்தையும் மனிதகுலத்திற்கு உணர்த்துவதே ராம காவியம் ஆகும். ராமரை விட ராம நாமத்திற்கே மகிமை அதிகம் என்பார்கள். அத்தனை சிறப்பு மிக்க ராமர், பங்குனி மாதம் சுக்லபட்சம் நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.



ராமன் என்றாலே ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள். மகாவிஷ்ணுவிடம் ஒருமுறை நவமி மற்றும் அஷ்டமி திதிகள் இரண்டும், தங்களுக்குரிய நாளில் மட்டும் யாரும் சுபகாரியங்கள் நடத்துவதில்லை. தங்களை கெட்ட நாட்களாக ஒதுக்குவதாக சொல்லி வேதனையுடன் முறையிட்டன. அப்போது அவர்களுக்கு வரமளித்த மகாவிஷ்ணு, உங்களை சிறப்பிக்கும் விதமாக கிருஷ்ண அவதாரத்தில் அஷ்டமி திதியிலும், ராம அவதாரத்தில் நவமி திதியிலும் அவதரிக்கிறேன். அப்போது உங்கள் இருவரையும் உலகத்தில் உள்ள அனைவரும் கொண்டாடுவார்கள் என்றார்.

அதன் படி ராம பிரான், நவமி திதியில் பகல் வேளையில் அவதரித்தார். ஸ்ரீராம நவமி நாளில் வீட்டில் உள்ள ராமரின் படம் அல்லது ராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூக்கள் சூட்டி ஸ்ரீ ராம நாமம் சொல்லி வழிபட வேண்டும். பானகம், நீர்மோர், துளசி, துளசி தண்ணீர், புளியோதரை, கற்கண்டு, எலுமிச்சை சாதம் இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் நீர்மோர் மற்றும் பானகம் வைத்து வழிபடலாம். ராமர் காட்டில் வசித்த காலத்தில் நீர்மோர், பானகத்தையே விரும்பி சாப்பிட்டதால் இவை அவருக்கு பிரியமான உணவுகளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் ராமாயணம் படிப்பது மிகவும் சிறப்பானது. ஸ்ரீ ராம ஜெயம் அல்லது ஸ்ரீ சீதா ராம ஜெயம் என்ற நாமத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை எழுதவோ, உச்சரிக்கவோ செய்யலாம். ராம என்ற நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலோ 1000 முறை உச்சரித்த பலனும், விஷ்ணு சகஸ்ரநாமம் படித்த பலனும் கிடைக்கும். 

ஸ்ரீ ராமர், 5 நட்சத்திரங்கள் உச்சம் பெற்ற நேரத்தில் அவதரித்தவர் என்பதால் ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பூஜை செய்வது நவகிரக தோஷங்களை நீக்கும், ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீ ராமரை வழிபட்டால் செல்வ வளம் பெறும். திருமண பேறு, குழந்தைப்பேறு ஆகிய பாக்கியங்கள் கிடைக்கும். பாவங்கள் தீரும். குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்