இன்று ஸ்ரீ ராம நவமி... செல்வ வளம் சேர்க்கும் ராமர் வழிபாடு

Mar 30, 2023,12:11 PM IST
சென்னை : மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஏழாவதும், மிக முக்கியமானதுமானது ஸ்ரீ ராம அவதாரம் தான். மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என வேதங்களும், சாஸ்திரங்களும் வழிகாட்டுகின்றன. ஆனால் அவற்றின் வழியில் நடப்பது யாராலும் முடியாது என அனைவரும் நினைக்கிறோம். ஆனால் வேதங்களில் சொன்ன அறத்தை பின்பற்றி, எத்தனை துன்பங்கள் வந்தாலும் நீதிநெறி தவறாமல் வாழ முடியும் என தெய்வமே மனிதனாக அவதாரம் எடுத்து, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராம பிரான்.

ஒரு மனைவி, ஒரு வில், ஒரு சொல் என வாழ்ந்தவர் ஸ்ரீராமர். அரசாட்சி, சகோதர பாசம், நட்பு, பெற்றோர்களை மதிப்பது, மனைவி மீதான பாசம், வீரம், பொறுமை, கருணை என அனைத்தையும் மனிதகுலத்திற்கு உணர்த்துவதே ராம காவியம் ஆகும். ராமரை விட ராம நாமத்திற்கே மகிமை அதிகம் என்பார்கள். அத்தனை சிறப்பு மிக்க ராமர், பங்குனி மாதம் சுக்லபட்சம் நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.



ராமன் என்றாலே ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள். மகாவிஷ்ணுவிடம் ஒருமுறை நவமி மற்றும் அஷ்டமி திதிகள் இரண்டும், தங்களுக்குரிய நாளில் மட்டும் யாரும் சுபகாரியங்கள் நடத்துவதில்லை. தங்களை கெட்ட நாட்களாக ஒதுக்குவதாக சொல்லி வேதனையுடன் முறையிட்டன. அப்போது அவர்களுக்கு வரமளித்த மகாவிஷ்ணு, உங்களை சிறப்பிக்கும் விதமாக கிருஷ்ண அவதாரத்தில் அஷ்டமி திதியிலும், ராம அவதாரத்தில் நவமி திதியிலும் அவதரிக்கிறேன். அப்போது உங்கள் இருவரையும் உலகத்தில் உள்ள அனைவரும் கொண்டாடுவார்கள் என்றார்.

அதன் படி ராம பிரான், நவமி திதியில் பகல் வேளையில் அவதரித்தார். ஸ்ரீராம நவமி நாளில் வீட்டில் உள்ள ராமரின் படம் அல்லது ராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூக்கள் சூட்டி ஸ்ரீ ராம நாமம் சொல்லி வழிபட வேண்டும். பானகம், நீர்மோர், துளசி, துளசி தண்ணீர், புளியோதரை, கற்கண்டு, எலுமிச்சை சாதம் இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் நீர்மோர் மற்றும் பானகம் வைத்து வழிபடலாம். ராமர் காட்டில் வசித்த காலத்தில் நீர்மோர், பானகத்தையே விரும்பி சாப்பிட்டதால் இவை அவருக்கு பிரியமான உணவுகளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் ராமாயணம் படிப்பது மிகவும் சிறப்பானது. ஸ்ரீ ராம ஜெயம் அல்லது ஸ்ரீ சீதா ராம ஜெயம் என்ற நாமத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை எழுதவோ, உச்சரிக்கவோ செய்யலாம். ராம என்ற நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலோ 1000 முறை உச்சரித்த பலனும், விஷ்ணு சகஸ்ரநாமம் படித்த பலனும் கிடைக்கும். 

ஸ்ரீ ராமர், 5 நட்சத்திரங்கள் உச்சம் பெற்ற நேரத்தில் அவதரித்தவர் என்பதால் ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பூஜை செய்வது நவகிரக தோஷங்களை நீக்கும், ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீ ராமரை வழிபட்டால் செல்வ வளம் பெறும். திருமண பேறு, குழந்தைப்பேறு ஆகிய பாக்கியங்கள் கிடைக்கும். பாவங்கள் தீரும். குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்