அயோத்தி ராமர் கோவில் சிலைக்கு.. நேபாளத்தில் இருந்து வந்த கற்கள்!

Feb 02, 2023,02:09 PM IST
அயோத்தி : அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ள ராமர் சிலையை உருவாக்குவதற்காக நேபாளத்தில் இருந்து பெரிய அளவிலான கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை அயோத்தி மக்கள் மலர் தூவியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றுள்ளனர்.



அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இரண்டு சாளகிராம கற்கள், நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்து மத கோட்பாடுகளின் படி, சாளகிராமம் என்பது மகாவிஷ்ணுவின் மறு வடிவமாக பார்க்கப்படுகிறது. தெய்வீக தன்மையை அதிகம் கொண்ட இந்த சாளகிராம கற்கள் நேபாளத்தில் உள்ள ஆறுகளில் மட்டுமே கிடைக்கக் கூடியன. 

இதனால் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட்ட ராமர் சிலையை வடிவமைப்பதற்காக நேபாளத்தில் இருந்து சாளகிராம கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அயோத்தி வந்தடைந்த இந்த கற்களுக்கு ராம ஜென்ம பூமியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஸ்ஷேத்திர டிரஸ்டால் கொண்டு வரப்பட்ட இந்த கற்களை அப்பகுதி மக்கள் மலர்கள், மாலைகள் கொண்டு அலங்கரித்தனர்கள். புரோகிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, ராமர் கோவில் அமைய இடத்திற்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டன.

பாறை வடிவிலான சாளகிராம கற்கள் ராமர் மற்றும் சீதை சிலைகள் அமைக்க பயன்படுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாறைகள் நேபாளத்தின் மியாக்தி மற்றும் முஸ்டங் மாவட்டங்கள் வழியாக பாயும் காளி கந்தகி நதி படுகைகளில் இருந்து, மிகப் பெரிய பழுதூக்கும் இயந்திரங்களைக் கொண்டு நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜானகிபுருக்கு முதலில் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

நேற்று (பிப்ரவரி 01) இந்தியாவின் கோரக்பூரை வந்தடைந்த இந்த சாரகிராம கற்கள், மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டன.  இந்த சாளகிராம கற்கள் நேபாளத்தில் உள்ள தாமோதர் குண்ட் பகுதியில் உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு பாறைகளும் 30 டன் எடை கொண்டவை என சொல்லப்படுகிறது. ஒவ்வொன்றும் சுமார் 14 முதல் 18 டன் எடை கொண்டது என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்