சென்னை : தமிழகத்தில் ஒமிக்ரான் XBB, BA2 வகை வைரஸ் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா, வைரஸ் காய்ச்சல் ஆகியன அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியானது. சளி, காய்ச்சல், தொண்டையில் தொற்று ஆகியவற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் சிலர் இது வழக்கமாக சீசனில் பரவும் காய்ச்சல் தான் என கூறி வந்தனர். ஆனால் தீவிர வைரஸ் ஒன்று பரவுவதை பில் கேட்ஸ் உள்ளிட்ட பலரும் உறுதியாக கூறி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது தொடர்பாக, தமிழக அரசு எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை, முன்னேச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் XBB, BA2 வகை வைரஸ் பரவி. ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர் மறுத்து விட்டார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}